Saturday, November 3, 2012

உயிரே திரும்பி வந்து விடு

பார்த்தும் பாராமல் போகும் எனதுயிரே கொஞ்சம் நில்லடி
பேசிடவே வந்தேன், நான் சொல்வதை சற்றே கேளடி
என் மேல் பொய் கோபம் கொள்வதும் ஏனோ டி
எனக்கே உரியவள் என காட்டிட தானோடி...

உன்னை நினையாமல் இருந்தேன் என கொள்வதேனோடி
உனக்கெனவே வாழ்ந்திடும் போது நினைத்திடல் வேண்டுமோடி...
உன்னோடு போடும் சண்டையது கானல் நீர் போல் பொய்யானதடி
உன் மேல் கொண்ட காதல் அது போல் அல்ல மெய்யானதடி...

பேசாது நீயும் சென்றால் ஏற்பட்ட ஊடல் அது தீருமோடி 
கொடும் ஆயுதம் அதுவன்றோ என்னை கொன்றே தீருமடி...
வாழ்வென்பது ஒரு முறை தான், மறந்தாயோடி 
காத்திருத்தல் வீணே உடனே வந்து சேரடி...

ஊடல் இது விட்டு செல்லும் பரிசை அறிவாயோடி 
பேரின்ப உள்ளம் ஆசையில் பொங்கி ததும்புமடி...
பொங்கியது எனது உள்ளம் அணைத்திட வாராயோடி 
தாங்கிட எனது உயிரை, இரு கரம் தருவாயோடி...  

No comments:

Post a Comment