என்னையே நான் பார்த்ததும்
நானே நம்பவில்லை
அடையாள அட்டையில் எனது
படம்…!
தூங்கியவர்களை எழுப்பியதற்கு தண்டனை
தலையில் அடி வாங்கியது மேஜை கடிகாரம்
கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததோ இல்லையோ
அதை நண்பர்களிடம்
சொல்லிக்கொள்ள
சென்று விட்டார் நம்மவர்
தேநீர் விடுமுறைக்கு….!
உழைத்து களைத்தோரின் சொர்க்கம்
உழைக்காமல் கிடப்போரின் வேலை
நல்ல
உறக்கம்….
கொல்ல வந்தவன் சாம்பலானான்
ஏற்றி வைத்த கொசு வர்த்தி….
No comments:
Post a Comment