Saturday, November 3, 2012

எப்பொழுதும் நீ

நிலா பொழுது வானம்
மழை பொழுது மேகம்
தோள் தந்திட நானும்
அதன் மேல் சாய்ந்திட நீயும்
கரம் கோர்த்து நாமும்
நடை போடும் நேரம்
உறைந்திட கூடாதோ காலம்…

காலை பொழுது மலரும்
பூவைப்போல உன் முகம்
கூர்ந்த சிறு புருவம்
மலர்ந்த சில பருவும்
கண்கள் மனம் கவரும்
கண்ணம் கொள்ளை கொள்ளும்
மறையாதே உன் அழகுருவம்…

மாலை பொழுது நேரும்
தனிமை அது சோகம்
உனை கண்ட நேரம்
அது அகன்று போகும்
அணைத்திட உன் கரம்
மாறாத உன் மனம்
எப்பொழுதும் வேண்டும்…

No comments:

Post a Comment