பாலையென இருந்த என் வாழ்வில்
மழை வாசம் நீயடி
வாடை காற்றின் குளிர்ச்சி
உன் செவ்விதழ் முத்தமடி
மழை நனைத்த நிலமாய் நீ அணைக்க
என் தேகம் சிலிர்க்காதோ
மேகம் கண்ட மயிலாய் உன் முகம் பார்க்க
என் மனம் ஆடாதோ
பூப்பற்றிய மழை துளி போல்
உன் முகம் பற்றி என் நெஞ்சில் புதைப்பேனே
நீர் காணா விளைநிலம் போல்
நீ இல்லா நேரம் ஏங்கி தவிப்பேனே
மின்னல் ஒளி உன் சிரிப்பில்
என் காலம் உறைந்திடக் கூடாதோ
கார்மேக கூந்தல் அதில்
நான் தொலைந்திடக் கூடாதோ
பருவம் முடிந்த மழையென
மறைந்து போவாயோ
மழை தந்த வெள்ளம் போலே
உன் நினைவுகள் மட்டும் விட்டு செல்வாயோ
என்னை பிடித்த உனக்கு என் கரம் பிடிக்க
சிரமம் தான் எத்துனை
வேண்டி நின்ற எனக்கு உன்னை சேர
அந்த கடவுள் தான் வழித்துணை
No comments:
Post a Comment