உன் விழி பார்த்து கவிதை சொல்ல
நீ என் காதல் இல்லை
என் வழி பார்த்து நானும் செல்ல
நீ யாரோ என்று இல்லை
விதி பார்த்து நாம் சேர
இனி நீயும் நானும் வேறில்லை
நீ கண் கலங்கிட எதுவும்
நடவாமல் தவிர்ப்பேன்
மென்குரலில் நீயும் பேசிட எதையும்
பொறுமையில் சிறிதும் குறையாது கேட்பேன்
தலை சாய்த்து கொண்டு நீயும் நடக்க
உ(ன்னு)டனே வந்து விடுவேன் தோளும் தருவேன்
நீ கண் சிமிட்டி விடை பெரும் நேரம்
என் கரங்கள் நீட்டி வேண்டாம் என்பேன்
வாழ்கை அது பங்கு சந்தை போல
அதன் ஏற்றமும் இறக்கமும் நிலையில்லை
பிறந்து விட்டோம் சிலந்தி வலை போல
மாட்டிகொண்டோம் தப்பிக்க வழியில்லை
துணை ஒன்று உன்னை போல
நான் எங்கும் கண்டதில்லை
நீடிக்க வேண்டும் இது போல
நடக்குமா சொல் தோழி…!
No comments:
Post a Comment