இன்பம் அது கொட்டி இருக்கு
வாரிக் கொள்ள
எவருமுண்டோ…!
முகம் அது சிரித்து இருக்க
துன்பம் ஏதும்
நெருங்குவதுண்டோ..!
கண்களில் நீர் மல்க நின்றால்
ஏதேனும்
சீராகிவிடுமோ…!அப்படியானால் எஞ்சிய சிறிய நிலமும்
பாதி
ஆகி விடாதோ…!
துன்பம் ஏதும் இல்லா மனிதரை
இவ்வுலகில் காண்பது அரிதன்றோ…!
உப்பில்லா பண்டம் சுவைப்பதுண்டோ
துன்பம் இல்லா வாழ்வு
தழைப்பதுண்டோ…?
No comments:
Post a Comment