தந்தையென எனக்கு பதவி உயர்வளித்த
மைந்தா நீ வாராயோ…
இன்பமென என் வீட்டில் தவழ்ந்திட
நீ ஆனந்தம் தருவாயோ…
இன்று உன்னாலே என் தந்தையின்
உணர்வை நான் உணர்கிறேன்
இன்று உன்னாலே எனது பச்சிளம்
பருவத்தை நான் காண்கிறேன்
அது வேண்டும் என நீ கேட்காது எதையும்
உன் தேவையறிந்து பூர்த்திசெய்வேன்
நான் தவறிய எதையும் நீயும் தவறாமல்
இருக்க பார்த்துக்கொள்வேன்
என் தந்தை என்னை வளர்த்தது போல்
உன்னை வளர்ப்பேன அது தெரியாது…
என்னை விட பெரிய நிலையில் உன்னை
கொண்டு சேர்ப்பேன் இன்னல்கள் நெருங்காது…
அப்பா என நீ அழைக்க என் செவிகள்
தவம் துடங்கி விட்டன…
உன்னுடன் ஓடி ஆட என் கால்கள்
துடியாய் துடிக்கின்றன…
என் வாழ்விற்கு பொருள் சேர்க்க
நீ பிறந்தாயோ…
அல்லது என் வாழ்விற்கே காரணம்
ஆகா நீ வந்தாயோ…
எப்பொழுதும் உன்னை தனியாக
விடாது பார்த்துக்கொள்வேன்…
ஆயுளுக்கும் இது நடக்கும் என
உறுதி அளிக்கிறேன்…
No comments:
Post a Comment