வான் கொண்ட விண்மீன் தரை தட்டி விழுந்தது ஏனோ
என் வீட்டில் ராணியாய் அவள் தவழ்ந்திட தானோ…
மழை அது வாசலில் வெள்ளமென திரண்டது ஏனோ
என் குழந்தை அவள் சிரிப்பதை கேட்டிடதானோ…
இன்பத் தென்றல் என் இல்லத்திலே வீசுவதேனோ
என் தாயவள் மீண்டும் பிறந்ததாலோ…
என் மனம் அது துள்ளி குதிப்பது ஏனோ
நிலவு மகள் நெஞ்சிலே உதைப்பதாலோ…
பால் வண்ண மேனி எழில் கொண்டு துயில்வதை அறிவீரோ
கருவிழி இரண்டால் பேசிடும் பதுமையை காண்பீரோ…
தேவதை அவளை வாழ்த்திட என் இல்லம் வருவீரோ
மகள் அவள் வாழ்வில் சிறக்க வரம் ஏதும் தருவீரோ…
No comments:
Post a Comment